Tuesday, May 21, 2024

என் காதலிக்கு ஒரு ஜெபம் | A Prayer for my Love

 



பரலோகத்திலிருந்து இறங்கி வந்த தேவேதயே,

போலோகம் உங்களை அடைவதில் பெருமையே.

உங்கள் பெயர் வாழ்க,

உங்களை நினைக்கும் உள்ளமும் வாழ்க.

நாம், அறியாமையால் செய்த தவறுகளை மன்னிப்பீராக,

உங்களின் கோபத்திற்கு அஞ்சலி, என் கண்ணீராக.

நீங்கள் நடக்கும் பாதையில் பூக்கள் மலரும்,

நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாக மாறும். 

உங்களின் புன்னகையில் ஆறாத  மனம் இல்லை,

தீராத வலி இல்லை.

உங்களின்  கண்களின் கூர்மையால் பற்றி எரிந்தது சில நெஞ்சம்,

அது போதும் போதும் என கெஞ்சும்.

உங்களை படைத்தவன் ஒரு ஞானி,

உங்கள் ஸ்பரிசம் ஒரு சஞ்சீவினி. 

உம்மையே என்றும் நாடுகிறேன்,

மனதில் வைக்க மன்றாடுகிறேன்.


By

Sanji-Paul Arvind




No comments:

Post a Comment

எரிந்துபோன கப்பலில் எனது பயணம்

ஒளி மங்கும் அந்த இடத்தில், நான் இன்னும் உன்னைக் காண்கிறேன். நள்ளிரவின் கீற்றால் பிளக்கப்பட்ட இருளில் உன் முகம் தெரிகிறது; நீண்ட காலத்திற்கு ...