உனக்காகவே…
எல்லாம் உனக்காகவே!
உன் மீது எனக்குள்ள அழியாத,
நித்தியமான அன்பை உனக்கு உறுதி செய்யவே,
இந்தக் கவிதையை எழுதுகிறேன்!
ஒரு நாள் இவையெல்லாம் முடிவுக்கு வரும்,
மரணம் என் விதியை அவமதித்தாலும்,
உன் மீதான என் அன்பும்,
நீயும் என்னை நேசிக்கிறாய் என்ற,
இந்த தெய்வீக நம்பிக்கையும்
என்னை என்றும் தாங்கும்!
இறந்தவர்கள் இந்த பூமிக்குத் திரும்பி வர முடிந்தால்,
கண்ணுக்குத் தெரியாமல் எப்போதும் உனக்கு அருகில் இருப்பேன்!
உன் கன்னத்தில் வீசும் மென்மையான தென்றல்
என் மூச்சாக இருக்கும்!
குளிர்ந்த காற்று உன் நெற்றியைத் தழுவும்போது,
அது கடந்து செல்லும் என் ஆன்மாவாக இருக்கும்!
நான் படுக்கையில் வெளித்தோற்றத்தில்
அமைதியாகப் படுத்திருந்தாலும்,
என் இதயம் என் உடல் முழுவதும் துடித்து
உன்னை மட்டுமே உணர்கிறது!
நீ மட்டும் கதவைத் தட்டியிருந்தால்,
உனக்காக அந்தக் கதவைத் திறக்க
நான் நரகத்திலிருந்து வந்திருப்பேன்!
உன்னைத் தவிர வேறு எதையும்
நான் தேடவில்லை என்பது,
அந்தக் கடவுளுக்கு மட்டுமே தெரியும்!
நான் எந்தப் பிணைப்பையும்,
எந்தப் பங்கையும் தேடவில்லை,
என் சொந்த இன்பங்களையும்
ஆசைகளையும் திருப்திப்படுத்த முயலவில்லை,
உனக்கு நன்றாகத் தெரியும்,
அனைத்தும் உனக்காகவே!
வேறு யாரும் என் இதயத்தை ஒருபோதும்
சொந்தமாக்க முடியாது, ஒருபோதும்!
என் கொள்கை உனது அன்பு,
நீயே அதன் ஒரே கோட்பாடு!
வேறு யாரும் என் இதயத்தை சொந்தமாக்க முடியாது…
ஏனெனில் அனைத்தும் உனக்காகவே!
By
Sanji-Paul Arvind






