Friday, October 4, 2024

எனது வரம்


உன்னுடன் உறவொன்று வரம் கேட்டேன், 

தனிமை வரமாய் கிடைத்தது.


உன்னுடன் சந்தோஷம் என்ற வரம் கேட்டேன், 

துக்கம் வரமாய் கிடைத்தது.


உன் அன்பினை வரம் கேட்டேன், 

வெறுப்பு வரமாய் கிடைத்தது. 


உன்னை பிரியா வரம் கேட்டேன், 

பிரிந்து வாழ வரம் கிடைத்தது.


மறைந்துபோக வரம் கேட்டேன்,

நீ இல்லாமல் வாழ்க்கை வரமாய் கிடைத்தது.


மன அமைதியை வரம் கேட்டேன்,

கவலைகள் வரமாய் கிடைத்தது.


நீ வாழும்வரை நான் இருக்க வரம் கேட்டேன்,

மரணம் வரமாய் கிடைத்தது.


By

Sanji-Paul Arvind


No comments:

Post a Comment

Be The Real You

The world asks you to be someone you're not, But remember, it's never your fault. Life can be too heavy to bear, And your mind may t...