Friday, October 4, 2024

எனது வரம்


உன்னுடன் உறவொன்று வரம் கேட்டேன், 

தனிமை வரமாய் கிடைத்தது.


உன்னுடன் சந்தோஷம் என்ற வரம் கேட்டேன், 

துக்கம் வரமாய் கிடைத்தது.


உன் அன்பினை வரம் கேட்டேன், 

வெறுப்பு வரமாய் கிடைத்தது. 


உன்னை பிரியா வரம் கேட்டேன், 

பிரிந்து வாழ வரம் கிடைத்தது.


மறைந்துபோக வரம் கேட்டேன்,

நீ இல்லாமல் வாழ்க்கை வரமாய் கிடைத்தது.


மன அமைதியை வரம் கேட்டேன்,

கவலைகள் வரமாய் கிடைத்தது.


நீ வாழும்வரை நான் இருக்க வரம் கேட்டேன்,

மரணம் வரமாய் கிடைத்தது.


By

Sanji-Paul Arvind


No comments:

Post a Comment

Rainbow is the Colour of My Love

Some people love in black or white, Some stories live in shades of grey, But my love shines colours bright, Like a rainbow during any day. R...