Wednesday, March 18, 2026

சில உறவுகள்



மழைத்துளிகளைப் போல,
வாழ்க்கையில் வரும் சில உறவுகள்.
சில நொடிகளில் மண்ணில் கலந்து
மறைந்து விடுகின்றன.

ஆனால், ஒரு சிலர் மட்டும்
நம் உள்ளத்தின் வாசலை தட்டுவதில்லை,
அதைத் உடைத்து உள்ளே வந்து
உள்ளத்தின் ஆழத்தைத் தொட்டுச் செல்கிறார்கள்.

அவர்களின் வருகை
ஒரு சாதாரண சந்திப்பு அல்ல,
ஒரு மகிழ்ச்சியான இசையை
முதல் முறையாகக் கேட்பது போல ஓரு உணர்வு.

வேறு யாரும் அறியாத வழிகளில்,
அவர்கள் நம் எண்ணங்களை திருடிவிடுவார்கள்,
பிறகு நம் சிந்தனைகளை,
இறுதியில், கவனமில்லாத நேரத்தில்
நம் இதயத்தையும்.

அது எப்போதும் எளிதாக இருக்காது,
சில நேரங்களில்
விளக்கம் இல்லாத உணர்வுகளை
இரண்டு கைகளாலும் பிடித்து நிற்கும்
இரண்டு ஆன்மாக்களைப் போல இருக்கும்.

அழகானவர்கள்
ஆனால் குறையுள்ளவர்கள்,
உடைந்தவர்கள்
ஆனால் உணர்ச்சியில் முழுமையானவர்கள்.

அந்த குழப்பமே
அதை அர்த்தமுள்ளதாக மாற்றுகிறது.
ஏனெனில்,
ஒருவர் நம் ஆன்மாவைத் தொடும்போது,
அவர்களுடன் இருந்தால்
சாதாரணமான நாட்களும்
அசாதாரணமாக மாறிவிடும்.

அவர்கள் அருகில் இல்லாதபோதும்,
அவர்களின் சுவாசம் நம்முடன் இருப்பதை போல,
ஒரு நினைவு நம் எண்ணங்களில்
வாழ்ந்து கொண்டே இருக்கும்.

அப்போது தான் புரியும்
சில உறவுகள்
வந்து போகும் தருணங்கள் அல்ல,
அவை
நம்முள் என்றும் தங்கி
நம்மை மாற்றி விடும்
அழியாத தடயங்கள் என.

By
**Do not judge my life based on my poems; My Poems and my life are 2 different things.

No comments:

Post a Comment

சில உறவுகள்

மழைத்துளிகளைப் போல, வாழ்க்கையில் வரும் சில உறவுகள். சில நொடிகளில் மண்ணில் கலந்து மறைந்து விடுகின்றன. ஆனால், ஒரு சிலர் மட்டும் நம் உள்ளத்தின்...