உனது பெயர் ஒரு கீர்த்தனம்,
அதை புகழ்வது என் வாழ்க்கையின் நோக்கம்!
என்றென்றும் என் நினைவில் இருக்கும்,
அதுவே எனக்கு மிகப்பெரிய பாக்கியம்...
அதுவே எனக்கு மிகப்பெரிய பாக்கியம்...
வாழ்க்கை உன் முகப்பொலிவில் நடக்கட்டும்,
உனது ஞாபகங்கள் என் சிந்தனையில் நிரம்பட்டும்!
மென்மேலும் உனது நாமத்தை துதிக்கட்டும்,
என் ஆன்மா என்றும் உன்னைத் தொடரட்டும்...
என்றென்றும் உன்னழகை வர்ணிக்கட்டும்,
என் மனம் உன்னையே தியானிக்கட்டும்!
என் நாவு உன்னை போற்றிப் பாடட்டும்,
உனது கிருபை என்றும் என்மேல் இருக்கட்டும்...
உனது கிருபை என்றும் என்மேல் இருக்கட்டும்!
By
Sanji-Paul Arvind

No comments:
Post a Comment