Monday, May 27, 2024

என்மன வானில்


என்னுலகின் நிலவென,

உன்னை மனதில் வரைந்தேன்.

நட்சத்திரம் நீ என,

கண்டு மகிழ்ந்தேன்.

உன் விழி, ஒலியென,

சந்தோஷம் அடைந்தேன்.

வேண்டும் உன் பாசம் என,

எந்தன் மனம் திறந்தேன்.

அது அமையவில்லை என,

சுக்கு நூறாக உடைந்தேன்,

உன் அன்பு கிடைக்காது என,

உன்னை விட்டு பிரிந்தேன்.


By

Sanji-Paul Arvind

No comments:

Post a Comment

நீயே என் உலகம் + Song

உனக்காகவே… எல்லாம் உனக்காகவே! உன் மீது எனக்குள்ள அழியாத, நித்தியமான அன்பை உனக்கு உறுதி செய்யவே, இந்தக் கவிதையை எழுதுகிறேன்! ஒரு நாள் இவையெல்...