தலை சாய்ந்து நீ உறங்கு.
தூக்கம் நிறைந்த உன் கண்களுக்கு,
ஆறுதல் கொடுக்கும் எந்தன் மடி.
இரவு வந்தது சந்திரனுடன்,
நீ உறங்கும் அழகை காணும்.
மென்மையான காற்றும் வீசும்,
நீ அசையாமல் ஓய்வெடு.
என் கண்மணியே, என் காதலியே,
இதயத் துடிப்பு உனக்காக தாலாட்டு ஆகும்.
அமைதியுடன் நீ உறங்கு,
உன்னை காண இரவிலும் வானவில் மலரும்.
கண்களை மெதுவாய் மூடிவிடு,
கனவுகளின் பாதையில் சென்று தொடு;
அங்கு அனைத்தும் காத்திருக்கிறது
உன் இனிய வருகைக்காக.
என் பொன்மணியே, என் பெண்மணியே,
என் கைகளை பிடித்து நீ கண்மூடு.
விடியும் வரை நான் இருப்பேன்,
உன் அருகில் என்றும் உன்னோடு.
மேகங்களின் மீது நீ ஏறி,
நட்சத்திரங்களோடு நீ விளையாடு;
சந்திரனின் மேல் அமர
அந்த அழகை நான் ரசிப்பேன்.
By
**Do not judge my life based on my poems; My Poems and my life are 2 different things.

No comments:
Post a Comment