ஏனடி என்மேல் இத்தனை கோபம்,
என் கனவிலும் வரதயங்குகிறாய்,
உன்னைகாண ஆவலாக இருக்கும்
என் கண்களுக்கு இரக்கம் காட்டடி.
தூங்குவதற்காகக் கண்களை மூடுகிறேன்
உன்னை மட்டுமே கனவுகளில் கான.
நீ அங்கே வந்து சந்திப்பாய் என
ஏனெனில் அங்கே வலி பின்தொடர முடியாது.
மௌனம் உரக்க ஒலிக்கிறது
அப்போதுதான் இரவுகளைக் கடப்பது கடினம்.
நான் உன்னைத் தேடும்போது
நீ இங்கே இல்லை என்பதை உணர்கிறேன்.
என்றாவது ஒரு நாள்,
ஒரே ஒரு பார்வை போதும்
உன்னுடைய ஒரு சிரிப்பு போதும்
என் மனம் ஆறுதல் அடையும்.
என் இரவுகளாவது நிஜத்தை விட
அமைதியானதாக மாறலாம்.
அந்தப் பொய்யிலும் நான் உன்னை நேசிப்பேன்.
யதார்த்தத்தின் வலி கற்பனையில் இதமளிக்கட்டும்.
By
**Do not judge my life based on my poems; My Poems and my life are 2 different things.

No comments:
Post a Comment