அவளின் முகத்தை காணும்பொழுது,
ஏதோ ஒரு அறியாத மகிழ்ச்சி.
என் உடைந்த இதய துண்டுகள்
மீண்டும் ஒன்றுசேர்வது போல.
அதனைத் தொடர்ந்து ஒரு அமைதி நிலவுகிறது
சொர்க்கத்தில் இருப்பது போல உணர்வைத் தருகிறது.
அவளின் புன்னகை...
அது என் துக்கத்தைப் போக்கிவிடுகிறது.
அந்தக் கணத்தில்,
நான் சிந்தனைகளோடு போராடுவதில்லை...
ஏதோவொரு விதத்தில்,
அதுவே போதுமானதாக இருக்கிறது.
அவளுடன் பாதுகாப்பாக உணர நான் ஏங்கினேன்,
நான் உறுதியான, உண்மையான ஓர் அன்பை விரும்பினேன்.
கலப்படம் இல்லாத அவளின் இதயம் வேண்டினேன்,
தூய்மையான ஒரு காதலை உணர்ந்தேன்.
யுகயுகங்களாக நோயுற்றிருக்கும் என் ஆன்மாவுக்கு
அவள் ஓர் மருந்தாக இருந்தாள்.
இன்னும் எதனை முறை
இறந்து பிறக்க வேண்டும் என நான் அறியேன்.
By
**Do not judge my life based on my poems; My Poems and my life are 2 different things.

No comments:
Post a Comment