காலத்தின் கோலங்கள் மாற்றியதே!
விடைபெறும் நொடியிலும் மாறவில்லை,
என் காதல் உன்னோடு வாழ்கிறதே.
பக்கத்தில் நீயிருக்கும் அந்த உணர்வு,
நெஞ்சுக்குள் எந்நாளும் அழியாதடி.
கைக்கோர்த்து நாம் நடந்த பாதையெல்லாம்,
உன் நிழலாய் என் நாணம் தொடருதடி.
மகிழ்ச்சியின் தருணங்கள் சூழும்போதெல்லாம்,
உன் புன்னகை முகமே தோன்றுதடி.
கால நதி இங்கு ஓடி முடிந்தது,
கனவுகள் யாவும் கலைந்து போனதே.
நழுவிய கைகளை நான் பிடித்திட,
நகர்ந்தது வாழ்க்கை...
நீ மறைந்தாயே!
சில கனாக்கள் இங்கு நனவாகலாம்,
ஆனால் நம் வாழ்வில் நாமில்லை.
தோல்வியென்று இதை நான் சொல்ல மாட்டேன்,
வருத்தப் பட்டு அழப் போவதில்லை!
நீ என் பலம்... நீ என் தேடல்...
நான் நானாய் வாழும் காரணமே!
இதயத்தின் ஆழத்தில் நீயிருப்பாய்...
என்றென்றும் அழகாய் நீயிருப்பாய்...
By
Sanji-Paul Arvind

No comments:
Post a Comment