எந்நாளும் நீ நலமாய் வாழவே
என் தினப் பிரார்த்தனை.
அதை நான் காண முடியாதது
என் மன வேதனை.
எந்நாளும் நீ சிரிக்க,
என் மனம் குளிரும்.
அந்த சிரிப்பை என் கண்கள் காண முடியாதது
என் மனம் அழும்.
எந்நாளும் நீ வாழ்க்கையில் முன்னேறி நடக்க
நான் காணும் கனவு.
ஆனால் உன்னுடன் நான் நடக்க முடியாதது
என் வாழ்க்கையின் குறை.
நீ உச்சத்தைத் தொட வேண்டும்,
அதுவே என் ஆசை.
ஆனால் அந்தப் பயணத்தில்
உன்னுடன் நிற்க முடியாதது
என் விதியின் வலி.
நீ என் வாழ்வின் நந்தவனம்;
உன் புன்னகை மலரும்போதெல்லாம் மலர்கள் பூக்கின்றன.
அப்பொழுது வானமும் ஜொலிக்கும்,
ஏனெனில் என் உலகிற்கு நீ ஒரு வெளிச்சம்.
By
Sanji-Paul Arvind

No comments:
Post a Comment