Saturday, September 12, 2026

என் உலகின் ஒளி



எந்நாளும் நீ நலமாய் வாழவே
என் தினப் பிரார்த்தனை.
அதை நான் காண முடியாதது
என் மன வேதனை.

எந்நாளும் நீ சிரிக்க,
என் மனம் குளிரும்.
அந்த சிரிப்பை என் கண்கள் காண முடியாதது
என் மனம் அழும்.

எந்நாளும் நீ வாழ்க்கையில் முன்னேறி நடக்க
நான் காணும் கனவு.
ஆனால் உன்னுடன் நான் நடக்க முடியாதது
என் வாழ்க்கையின் குறை.

நீ உச்சத்தைத் தொட வேண்டும்,
அதுவே என் ஆசை.
ஆனால் அந்தப் பயணத்தில்
உன்னுடன் நிற்க முடியாதது
என் விதியின் வலி.

நீ என் வாழ்வின் நந்தவனம்;
உன் புன்னகை மலரும்போதெல்லாம் மலர்கள் பூக்கின்றன.
அப்பொழுது வானமும் ஜொலிக்கும்,
ஏனெனில் என் உலகிற்கு நீ ஒரு வெளிச்சம்.

By
Sanji-Paul Arvind

No comments:

Post a Comment

எரிந்துபோன கப்பலில் எனது பயணம்

ஒளி மங்கும் அந்த இடத்தில், நான் இன்னும் உன்னைக் காண்கிறேன். நள்ளிரவின் கீற்றால் பிளக்கப்பட்ட இருளில் உன் முகம் தெரிகிறது; நீண்ட காலத்திற்கு ...