அவளின் வாழ்க்கையில்
எனக்கொரு இடமில்லையெனில்,
அவளது இதயத்தில்
என் கல்லறைக்கு ஒரு இடம் வேண்டுகிறேன்.
நான் விரும்பிய அவள் அங்குதான்,
என் காதல் மலர்ந்ததும் அங்குதான்,
அவள் என்னை ஏற்க மறுத்ததும் அங்குதான்.
அதனால், நான் அங்கேயே மறைந்துவிட விரும்புகிறேன்.
என் காதலுக்குச் சொந்தமான
முழு அத்தியாயமும் அவளே.
காதலில் தோற்ற கதைகள் ஏராளம் இருந்தாலும்,
காதலால் அழிந்துபோன இதயம்
என்னுடையதே.
அவளுடன் என் வாழ்க்கை தொடரும் என்று நினைத்தேன்,
ஆனால் அது அவளிடமே முடிந்துவிட்டது.
என் கதை முடியும் வரை,
அவளின் நினைவுகள் மட்டும்
என்னைப் பின்தொடரும்.
என் காதல் பிறந்த இடத்திலேயே
நான் மறைந்துவிடுகிறேன்.
அவள் இதயத்தில்
என் கல்லறைக்கு ஒரு இடம் வேண்டுகிறேன்.
என் கதையில்
அவளது பங்கு முடிந்துவிட்டது.
ஆனால், அவளின் நினைவுகள் மட்டும்
முடிவில்லாத தொடர்கதையாக
என்னுள் வாழ்ந்து கொண்டே இருக்கின்றன.
By
Sanji-Paul Arvind

No comments:
Post a Comment