என் மகுடம் நீயடி,
இந்த ஜென்மத்தின் வரமும் நீயடி.
என் வாழ்வின் ஒளி நீயடி,
நான் காணும் சொர்க்கமும் நீதானடி.
என் கண் முன்னே தோன்றினாய்,
தேவதை போல நின்றாயே.
நீ என்றும் என்னோடு இருக்க வேண்டும்,
என்பதே என் தினப் பிரார்த்தனை.
அதுவே நான் பாடும் கீர்த்தனை.
இந்த உலகைத் தாண்டி,
உன் கூட வரவே
நான் தினமும் ஏங்கிக் கேட்கும்
ஒரே ஒரு வரமே.
உன்னை நெஞ்சில் சுமக்கிறேன்,
கருவைப் போல காக்கிறேன்.
என் மூச்சின் ஒவ்வோர் துளியிலும்,
உன் நினைவையே வாழ வைக்கிறேன்.
என் வானில் நீ மறைந்து போனாய்,
என் பெண் நிலவே.
நீ என்னை விட்டுச் சென்ற பின்னும்,
உன் உறவு மட்டும் என்னை விட்டு என்றும் பிரியாதே.
உன் மடி சேர நான் ஏங்கினேன்,
ஆனால் என் விதி சதியாய் மாறிவிட்டது.
காலத்தின் கட்டாயத்தில் நான்,
அதன் சுதந்திரத்தில் நீ வாழ்கிறாய்.
நான் தினமும் உன்னை நினைக்கிறேன்,
நீ சிரித்த நாட்களைத் தேடுகிறேன்.
உன் அன்பு என் நெஞ்சில் இருக்கும் வரை,
நீ என்றும் என்னுடன் வாழ்வாய்.
உன்னை நேசித்த இந்த இதயம்,
என்றும் உனக்காகவே துடிக்குமடி.
By
Sanji-Paul Arvind

No comments:
Post a Comment