அவள் சிரிப்பின் இனிமை
என் இல்லத்தை நிரப்பும்.
அவள் ஆன்மாவின் நறுமணம்
என் ஆன்மாவையும் நிறைக்கும்.
அவள் அருகாமையின் ஆறுதல்
எப்போதும் என்னுடன் இருக்கும்.
அவள் இதயத்தின் மகிழ்ச்சி
என் இதயத்தில் ஒளியாக மாறும்.
அவள் புன்னகை என் காலைப் பொழுதை வரவேற்கும்,
என் இரவுகளுக்கு அமைதியைத் தரும்.
அவள் அரவணைப்பின் கதகதப்பு
எந்தப் புயலிலிருந்தும் என்னைக் காக்கும்
ஒரு புகலிடமாக அமையும்.
அவள் இதயத்தின் மென்மை
ஆழமாக நேசிக்க என் இதயத்திற்குப் பாடம் புகட்டும்.
அவள் கனவுகள் சிறகடித்து உயரட்டும்;
அவற்றின் பயணத்தில் நான் என்றும் மகிழ்வேன்.
அவள் சுமைகள் குறையட்டும்,
அவற்றைத் தாங்கும் வலிமை
என் தோள்களுக்குக் கிடைக்கட்டும்.
அவள் கண்ணீர் ஒருபோதும்
தனிமையில் சிந்தப்படாமல் இருக்கட்டும்,
அவள் மகிழ்ச்சி என்றும் பெருக்கவேண்டும்.
அவள் முணுமுணுக்கும் ஒவ்வொரு பிரார்த்தனையும்
விண்ணுலகை அடையவேண்டும்.
அவள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும்
அமைதி, நோக்கம் மற்றும் அருளை நோக்கி அவளை வழிநடுத்தவேண்டும்.
அவள் ஆன்மாவின் அழகை ரசிப்பதில்
என் கண்கள் ஒருபோதும் சோர்வடையாது.
என் வார்த்தைகள் எப்போதும்
அவள் இதயத்தைப் போற்றிப் புகழவேண்டும்;
என் அன்பு மென்மையாகவும் உறுதியாகவும் இருக்கும்,
என் பொறுமை தளராது இருக்கும்,
என் அர்ப்பணிப்பு நிலையாக இருக்கும்.
அவள் மீதான என் அன்பை
காலம் ஒருபோதும் சிதைக்காது.
நமது வாழ்வின் ஒவ்வொரு பருவமும்
நமது ஆன்மாக்களை இன்னும் நெருக்கமாக்கட்டும்.
ஒருவேளை நம் பாதைகள் பிரிந்தாலும்,
என் அன்பு ஒருபோதும் கசப்பாக மாறாது;
என் இறுதி மூச்சு வரை
அது அவளது நினைவுகளைத் தாங்கி நிற்கும்.
By
Sanji-Paul Arvind

No comments:
Post a Comment