நான் எடுத்த ஒவ்வொரு முடிவின் பதிலாய்,
வேறொன்றை இழக்க நான் வேண்டி இருந்தது.
நான் தேர்ந்தெடுத்த ஒவ்வொரு பாதையிலும்,
மற்றொரு பாதையைக் கைவிட நேர்ந்தது.
ஒன்றிற்காக மற்றொன்றைத் தியாகம் செய்ய,
வாழ்க்கை என்னிடம் எப்போதும் கோரியது.
அந்த இக்கட்டான முடிவுகள் மத்தியிலும்,
நான் கைவிட்டது உன்னை அல்ல
என்பதை உணர்ந்தேன்.
சூழ்நிலைகள் எனக்கு எதிராக நின்றபோதும்,
மீண்டும் மீண்டும் உன்னையே தேர்ந்தெடுத்தேன்.
பொறுமையும் புரிதலும் தேவைப்பட்ட போதெல்லாம்,
யாரும் பார்க்காத என் அன்பைக் கொடுத்தேன்.
வாய்ப்புகளும் வசதிகளும் வாசலில் இருந்தும்,
அவை அனைத்தையும் கடந்து நான் சென்றேன.
நீ என் அருகில் இருப்பதை விடவும்,
முக்கியமாய் வேறெதுவும் இல்லை என்றிருந்தேன்.
இதற்காக நான் கொடுத்த விலைகளை,
நீ ஒருபோதும் அறியப்போவதில்லை.
உனக்காக அமைதியாய் நான் போராடிய,
போர்க்களத்தை நீ பார்க்கப்போவதில்லை.
காதல் என்பது புகழை எதிர்பார்ப்பதில்லை,
அது துணிந்து செய்யும் தியாகத்தால் வாழும்.
யாரும் பார்க்காத நேரத்தில் எடுத்த முடிவால்,
என் காதலின் ஆழம் இங்கே வரையறுக்கப்படும்.
நான் பெருமைப்படும் ஒரே முடிவு என்னவென்றால்,
என் வாழ்வின் ஒவ்வொரு முக்கியமான கட்டத்திலும்,
உன் மீதான அன்பை நான் ஒருபோதும் இழக்கவில்லை.
By
Sanji-Paul Arvind

No comments:
Post a Comment