Monday, August 31, 2026

அவளது நினைவுகளில் மூழ்கிக்கொண்டிருக்கிறேன்


நதியாகப் பாய்ந்து கடலாக மாறியது
அவளின் ஞாபகங்கள்;
நான் அதில் தினமும் மூழ்குகிறேன்.

அவள் இல்லாத வாழ்க்கை ஒரு பாலைவனம்;
என் உணர்வுகள் அனைத்தும் அங்கே வாடிவிட்டன.
இனி அதில் எதுவும் வளர்வதில்லை.

என் அன்பு அனைத்தையும் பொழிந்தேன்;
ஆனாலும் அவளது நெஞ்சைத் தொடவில்லை.
ஏன் என்று அறியாமல் தவிக்கிறேன்.
அவள் சுவாசம் என் மீது படவில்லை;
அதற்காக ஏங்கித் துடிக்கிறேன்.

தனியாகத் தவிக்கும் எனது உள்ளம்,
அது அவள் என் வாழ்க்கை மேல்
வரைந்த ஓர் ஓவியம்.
மழைத்தூறல்களில் அழிவதற்கு
என் காதல் நான் போட்ட கோலம் இல்லை;
அது என் விதியில் எழுதப்பட்ட ஓர் உண்மை.

அவள் மீதான என் பாசம் கடலலை போன்றது;
அதை யாராலும் மூடி வைக்க முடியாது.
என் மூச்சு உள்ளவரை அது நீடிக்கும்.

அவள் மீதான என் காதல் வானத்து மேகங்கள் போன்றது;
அதைத் திரை போட்டு மறைக்க முடியாது.
அது மழையாக மாறி
அவள் மேல் என்றும் தூவும்.

By
Sanji-Paul Arvind

No comments:

Post a Comment

எரிந்துபோன கப்பலில் எனது பயணம்

ஒளி மங்கும் அந்த இடத்தில், நான் இன்னும் உன்னைக் காண்கிறேன். நள்ளிரவின் கீற்றால் பிளக்கப்பட்ட இருளில் உன் முகம் தெரிகிறது; நீண்ட காலத்திற்கு ...