என்னவளே, என்னவளே, ஏனடி இந்தத் தூரம்?
உன் முகத்தைப் பார்ப்பதற்கே வேண்டுமடி ஒரு வரம்.
தினம் தினம் உன் நினைவுகள் என்னை வந்து வாட்டுதே,
அதைத் தடுக்க என்னிடத்தில் ஒரு வழியும் இல்லையே.
என் அழகே, என் அழகே, என் பேரழகியே,
என் உயிரே, என் உயிரே, என் உயிரின் ஓசையே.
ஒரு முறை என்னைத் திரும்பிப் பாரடி,
என் இதயம் சொல்வதைக் கேளடி.
உனக்காகக் கைகளை விரித்து நிற்குதடி,
ஒருமுறை அதில் இருக்கும் அன்பை வந்து உணரடி…
நீ நடந்த பாதையெல்லாம்
நான் தேடும் தடங்களடி,
நீ விட்டுச் சென்ற வார்த்தைகள்
இன்னும் என்னில் ராகமடி.
கண்களை மூடினால் நீ, கனவுக்குள்ளும் நீ,
கண்களைத் திறந்தால் என் எதிரில் இல்லை நீ.
இந்த வாழ்வில் வேறெதுவும் தேவையில்லை எனக்கு,
நீயே போதும், என் வரமாய் வந்தவளே.
உனக்கென என் மனதில் நாட்களை கட்டினேன்,
நம் நாளை என்று நினைத்து கனவுகளை விதைத்தேன்.
நீ தூரம் சென்ற நொடி எல்லாமே சிதைந்ததே,
நான் கட்டிய உலகமெல்லாம் கண்ணீரில் கரைந்ததே.
கனவுகளில் அருகில் வந்தாய்,
வாழ்க்கையில் தூரம் ஆனாய்.
நீ மகிழ்ச்சியாக வந்தாய்…
வலியாகச் சென்றுவிட்டாய்.
எங்கே போனாய்?
என்னை ஏன் விட்டுப் போனாய்?
என் காதல் குறையவில்லை,
ஆனால் நீ மட்டும் ஏன் மாறிப்போனாய்?
நான் கேட்ட வரம் நீ, நான் தேடிய உயிர் நீ,
இன்று தேடித் தேடி கிடைக்காத நினைவு நீ.
ஒருநாள் திரும்பி வந்தால் கேட்க மாட்டேன் காரணம்,
என் கைகளில் விழுந்துவிடு அதுவே போதும்.
கடைசியில், விடை தெரியாத புதிரானாய்,
வலி இல்லாத பாதையானாய்,
முடிவில்லா பயணமானாய்.
நான் வாழ்கின்ற ஒவ்வொரு நாளும்,
உன் பெயரைச் மற்றும் சுமக்குதே.
நான் சுவாசிக்கும் ஒவ்வொரு மூச்சும்
உன்னைத் தேடியே அலைந்ததே.
நீ காதலாய் தொடங்கினாய்,
நினைவாய் மாறிவிட்டாய்.
என் வாழ்வின் பாதியாய் இருந்து,
என் வலியாய் ஆகிவிட்டாய்.
கடைசியில் நீ என் கண்ணீரானாய்,
கடைசியில் நீ என் தனிமையானாய்,
கடைசியில் நீ என் நினைவானாய்,
கடைசியில் நீ என் மரணமானாய்.
By
Sanji-Paul Arvind

No comments:
Post a Comment