அவளின் மௌனம் என்னைத் தாக்குகிறது,
அவளின் தூரம் என்னைக் கொல்லுகிறது.
அவளின் சிரிப்பு என்னை அவளிடம் அழைக்கிறது,
அவளின் கண் பார்வை என்னை வாட்டுகிறது,
அவளின் முகம் எனக்கு சொர்க்கம் போல் தோன்றுகிறது.
காட்டாத காதல் மரவேர்களைப் போன்றது;
அது ஆழமாக வளர்ந்து, அமைதியாகப் பரவுகிறது.
அவளின் பல கோடி நினைவுகளும்,
அளவுக்கு மீறிய பாசமும் காதலும்,
என்னுள் வேர்களைப் போல வாழ்கின்றன.
அவள் சென்ற பின்,
என் வார்த்தைகள் ஊமையானது.
என் காதல் கோழையானது.
அவள் செல்லும் பாதையெல்லாம்,
என் ஆன்மாவும் பின் தொடர்கிறது.
தடுக்க முயன்றாலும்,
அது நிற்க மறுக்கிறது.
நான் அவளை அவளிடம் கேட்டேன்;
ஆனால் அவளோ,
என்னிடமிருந்து என்னை பறித்துச் சென்றாள்.
இப்போது நான் நடக்கிறேன்,
ஆனால் என்னுள் நான் இல்லை.
என் இதயம் இன்னும்
அவள் சென்ற பாதையோரம்
அவளைத் தேடிக்கொண்டே இருக்கிறது.
By
Sanji-Paul Arvind

No comments:
Post a Comment